Friday 26 August 2016

கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம்



கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம் 





கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் 
திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 




1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.


திரை இசையில் சாஸ்திரிய இசை (செவ்வியல் இசை), நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று பல அம்சங்கள், தேவைக்கு ஏற்றவாறு வழங்கும்.
இவை ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்து, பாடல் வரிகளில் பொதிந்த உணர்வுகள் வெளிப்படும்படியும், பாடலில் இனிமை மேலோங்கும் வண்ணமும் இசை அமைத்தவர், இசை மேதை, 'திரை இசை திலகம்' கே.வி.மகாதேவன். 

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார்.  

.இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர்.  ஆண்டவன் சன்னிதியில் இசை சமர்ப்பித்தவர். மாதம் மூன்று ரூபாயும், 20 படி அரிசியும் தான் சம்பளம்சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்


அறுபதுகளில் எழுந்த புராண பட வரிசைக்கு, நாடக இசையின் தொடர்ச்சியாக, வெற்றிகரமான பாரம்பரிய இசை தந்தவர் அவர். மகாதேவ ராகத்தில் தானே, 'திருவிளையாடல்' நடந்தது! 'தில்லானா மோகனாம்பாள்' திரையில் ஆடியபோது, தஞ்சை தரணியின் நாயன மணத்தோடும் சதிரின் எழிலோடும் சங்கீத மூர்ச்சனைகளைப் படித்தவர், 'மாமா!'



நலம் தானா என்று, சிக்கில் சண்முகசுந்தரத்திடம் அன்று மோகனாம்பாள் கேட்டதில் உள்ள கரிசனை, தமிழகம் எங்கும் இன்றும் ஒலிக்கிறதென்றால், அது நெஞ்சில் இருந்த கனிவு, பண்ணில் விளைந்ததால் தான். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், 'பா' வரிசைப் படங்களில் மெல்லிசை அலை எழுந்தபோது, 'வா, நானும் வருகிறேன்' என்று கைகோர்த்தவர் மகாதேவன். 


இதய கமலம் படத்தில் (1965) அவர் வடித்த இனிய நாதங்கள், இன்றளவும் வசீகரம் குன்றாத ஒலிச்சிற்பங்கள். இப்படி எத்தனையோ!
மகாதேவனை குறைந்தது, மூன்றாவது தலைமுறை இசைக்கலைஞர் என்று கூற வேண்டும். 



கடந்த, 1920ல் பிறந்த மகாதேவனின் இசைப் பாடங்கள், முதலில் அப்பாவிடம் தான் துவங்கின. பிறகு, அப்பாவே தேர்ந்தெடுத்த பூதப்பாண்டி அருணாசல அண்ணாவியிடம் சென்று, குருகுல முறையிலே சில ஆண்டுகள் இசை பயின்றார். 

தனது ௧௩வது வயதில்(15), ஸ்ரீபால கந்தர்வகான சபாவில் சேர்ந்தார் அன்றைய சூழ்நிலையில், இசை அறிந்த ஏழைப் பையன்களுக்கு, பாய்ஸ் கம்பெனிகள் தான் சரணாலயம். மேற்படி சபா அவரை, சென்னையில் அனாதையாக விட்டதால், யானைகவுனியில் ஒரு ஓட்டலில், பில் தொகையை உரக்கக் கூவும் பையனாக வேலை பார்த்தார்.


மாடர்ன் தியேட்டர்சில் சேர்ந்து, 
1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.
ஆனந்தன் அல்லது அக்னி புராண மகிமை (1942), 
பக்த ஹனுமான் (1944), 
தன அமராவதி (1948) ஆகிய படங்களுக்குப் பிறகு, வாய்ப்புகள் அற்றுப் போயின. எச்.எம்.வி., நிறுவனத்தில் சில ஆண்டுகள், இசை அமைப்பாளராகப் பணியாற்றினார்.


ஐம்பதுகளில் நிலைமாறி, பல வெற்றிகள் குவிந்தன. 
டவுன் பஸ் (1955), 
முதலாளி (1957), 
மக்களைப் பெற்ற மகராசி (1957), 
தை பிறந்தால் வழி பிறக்கும் (1958), 
சம்பூர்ண ராமாயணம் (1958) போன்ற படங்களின் பாடல்கள், இன்றும் மக்கள் இசையாக உலவி வருகின்றன.


எம்.ஜி.ஆரின் திரைப் பயணம் நெடுக, மகாதேவனின் இசைத் தடங்கள் பதிந்தன. மெட்டுக்குப் பாடல் என்றில்லாமல், பாடலுக்குப் பொருத்தமான மெட்டு, வாத்திய இசை என்று  மகாதேவன் செயல்பட்டதால், அவர் இசையில் மருதகாசியின் பாடல்கள் மணம்பரப்பின, 

கண்ணதாசனின் வரிகள் உன்னதத்தைத் தொட்டன. சங்கராபரணம் தந்து (1980), கர்நாடக இசைக்கு மக்கள் ரசனையில் இடம் உண்டு என்பதையும், தெலுங்கு திரைப்பட இசையில் தனக்கு ஒரு தனியிடம் உண்டு என்பதையும் காட்டினார் 


மகாதேவன். பாடல்களின் இனிமையைப் போலவே, மகாதேவனுக்கும், அவருடைய உதவி இசை அமைப்பாளரான டி.கே.புகழேந்திக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நட்பின் ராகம் ஒலித்தது. மிகப்பெரிய வெற்றிகள் நிறைந்த, நெடிய சாதனை சகாப்தத்தை, யார் மனதையும் புண்படுத்தாமல் மகாதேவன் செய்து முடித்தார்.

முதன்மைக் கட்டுரை: கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
விருதுகள்[தொகு]

சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)






சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, அடிமைப் பெண்)










சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம்)


சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு) (1992, சுவாதி கிரணம்)
கலைமாமணி விருது
மறைவு[தொகு]
கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்.[



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எஸ்.பி.பியை மிரட்டிய இசைமேதை இசைமேதை கே.வி.மகாதேவன் 
36 வருடம் கழித்து வெளிவரும் உண்மை! 



சுமார் 36 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி ஓராண்டு தொடர்ந்து ஓடி வெற்றி பெற்றதுடன், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து நான்கு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்த படம் தான் ‘சங்கராபராணம்’. கே.விஸ்வநாத் இயக்கி, கே.வி.மகாதேவன் இசையமைத்த தற்போது இந்தப்படம் டி.டி.எஸ் மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த 12 பாடல்களும் நவீன தொழில்நுட்பத்துடன் அதேசமயம் மாறாத இசையுடன் உருவாகி இருகின்றன. 36 வருடங்களுக்கு முன் அந்த ‘சங்கராபரணம்’ படத்தில் பாடிய எஸ்.பி.பி, ஜானகி, வாணி ஜெயராம் மூவரும் இந்தப்படத்தில் பாடியுள்ளனர்.



இதுபற்றி எஸ்.பி.பி சொல்லும்போது

“இந்தப்படம் தெலுங்கில் உருவானபோது நான் பல படங்களில் பிசியாக பாடிக்கொண்டிருந்த நேரம்.. அப்போது என் வீட்டிற்கு வந்த 

இசைமேதை கே.வி.மகாதேவன் அண்ணா என் தந்தையிடம் ஒழுங்கா அவனை இந்தப்படத்துல பாடிக்கொடுத்துட்டு மற்ற படத்துல பாடச்சொல்லுங்க என அன்பாக மிரட்டினார். 

என் தந்தையும் அவனுக்கு நல்லா பாடவரலைன்னா அவன் கன்னத்துல அறைந்து பாடவைங்க என்றார். 

அதன்பின் இந்தப்பாடலுக்காக மிகவும் பயிற்சி எடுத்து பாடினேன். அதுதான் எனக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது” என்கிறார் பெருமிதத்துடன்.



No comments:

Post a Comment